ஞாயிறு அன்று சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்

வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:01 IST)
அதன்படி வரும் ஞாயிறன்றும் சென்னையில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு. 

 
தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது.   
 
இதனைத்தொடர்ந்து தற்போது மெகா தடுப்பூசி முகாம் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஞாயிறன்றும் சென்னையில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
கடந்த ஞாயிறன்று 1,600 முகாம்களில் 1,91,350 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்