பயணிகளுக்கு மாஸ்க் கொடுத்த இண்டிகோ ஏர்லைன்ஸ்: அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (07:15 IST)
பயணிகளுக்கு மாஸ்க் கொடுத்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்களிலும் பயணம் செய்யும் பயணிகளுக்கு மாஸ்க் மற்றும் ஃபேஷ் ஷீல்டு வழங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் ஆன முககவசம் மற்றும் ஃபேஷ் ஷீல்டு வழங்கியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் கிடைத்தது
 
இதனை அடுத்து இது குறித்து சோதனை செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன மாஸ்க் மற்றும் ஃபேஷ் ஷீல்டு வழங்கியதை உறுதி செய்த அதிகாரிகள், இண்டிகோ  விமான நிறுவனத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இந்த அபராதத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன மாஸ்க்கை வழங்கிய இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்