பொங்கல் திருநாள்.. சென்னை மெரினாவில் மட்டும் 50 டன் குப்பைக்

புதன், 18 ஜனவரி 2023 (20:21 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த சில நாட்களாக சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பாக நேற்று காணும் பொங்கல் தினத்தன்று லட்சக்கணக்கானோர் சென்னை மெரினா மெரினாவில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொங்கல் விழா முடிந்த பிறகு தற்போது மாநகராட்சி ஊழியர்கள் சென்னை மெரினாவில் இருந்த குப்பைகளை  அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
 
சென்னை மெரினாவில் மட்டும் பத்து டன்கள் குப்பைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பணி புரிந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் சென்னையில் மொத்தம் 50 டன்கள் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்