இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை ஈரான் இன்னும் மறக்கவில்லை என்றும், அமெரிக்காவுக்கு எதிராகச் சில நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், ஈரான் நாட்டின் ஆட்சியாளரின் மூத்த ஆலோசகர் ஜாவத் லாரிஜானி, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது புளோரிடாவில் உள்ள வீட்டில் நீண்ட நேரம் சூரிய குளியல் போடுகிறார் என்றும், அந்த நேரத்தில் அவரை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினால் மிக எளிதாக கொன்றுவிடலாம் என்றும் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "சூரிய குளியல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என்றும், "கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் போட்டதாகவும், அதன் பின் தான் சூரிய குளியலில் ஈடுபடவில்லை" என்றும் அவர் காமெடியாக தெரிவித்தார்.