தும்பை இலை மற்றும் வேப்பிலை இவை இரண்டையும் சேர்த்து, அனல் மூட்டினால், அதனால் வரும் புகையால் கொசுக்கள் வராமல் தடுக்கலாம். இந்தப் புகை, நாம் சுவாசிக்கும் போது, உடல் நலமாக இருக்கும்.
தும்பை இலையை, ஆட்டுப்பாலில் இட்டு, காய்ச்சி அந்த பாலை தொடர்ந்து பருகி வர கருப்பை பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மிக முக்கியமாக இந்த மருந்து எடுத்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் சாப்பிடு உணவில் , உப்பு, புளி, காரம். கண்டிப்பாக சேர்க்கக் கூடாது.
தும்பை இலை பாலில் கலந்து சூடாக்கி பருகி வர கண் பார்வை குறைபாடுகள் சரியாகும். தேள் கடித்தவர்களுக்கு தும்பை இலை சாற்றை நாலு துளி அளவு எடுத்து, தேனில் கலந்து தேள் கடித்த இடத்தில் தும்பை இலை, சாற்றால் தேய்த்து விட விஷம் குறைந்து விடும்.