கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதை தீர்க்கும் கோவைக்காய் ஜூஸ் !!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:05 IST)
சிலருக்கு சரியான உடல் எடை இருந்தாலும் தொப்பை குறையாது. இதை சரி செய்ய தினமும் இந்த கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் தொப்பை குறைந்து விடும்.


சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மற்றும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

சிறுநீரகத்தில் கல் இருந்தால் இதற்கு கோவைக்காயுடன் கத்திரிக்காய் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும்.

உடலில் சேரும் கெட்ட கழிவுகளை கோவைக்காய் நீக்குகிறது. மசாலா அதிகம் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள், கடை சாப்பாடு இவைகளால் உடலில் கெட்ட கழிவுகள் அதிகரிக்கும். கோவைக்காய் கெட்ட கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கிறது.

சர்க்கரை நோயினால் நரம்பு, கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதையும் கோவைக்காய் சரிசெய்கிறது. சர்க்கரை குறைபாட்டைத் தீர்க்க கோவைக்காய் உதவும் என்பதால், இதை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

கோவைக்காயில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடெண்ட்கள் சர்க்கரை நோய்க்கு தனியாக மாத்திரைகள் சாப்பிடுவதை ஈடு செய்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்