ராம் ரஹிமின் மனைவி எங்கே? வலைவீசி தேடும் ஆசிரம நிர்வாகிகள்

வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (05:40 IST)
பாலியல் வழக்கில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தேரா சச்சா சவுதா அமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது



 
 
தலைவர் பதவியை கைப்பற்ற பாபாவின் வளர்ப்பு மகளான ஹனி பிரீத்துக்கும் பாபாவுக்கு மிகவும் நெருக்கமான பெண் துறவியான விபாசனாவுக்கும் இடையே போட்டி நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் ஆசிரம நிர்வாகிகள் ராம் ரஹீமின் மனைவி குழந்தைகளை தேடி வருகின்றனர்.
 
ஆம் 1990ஆம் ஆண்டே ராம்ரஹ்மிற்கு திருமணமாகி ரண்பிரீத், அமன்பிரீத் என்ற மகள்களும் ஜஸ்மீத் என்ற மகனும் உள்ளனர். ஆனால் இவர்கள் தற்போது எங்கு இருக்கின்றார்கள் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. ராம்ரஹிம் ஆசிரமத்தில் இருந்தபோது கூட மனைவியும் பிள்ளைகளும் ஆசிரமத்திற்கு வந்ததில்லையாம். தற்போது அவர்களை கண்டுபிடித்து தலைமை பொறுப்பை ஒப்படைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்