நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் வாவா சுரேஷ்!

ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:33 IST)
பாம்பு பிடிக்கும் போது நாகப்பாம்பு கொத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபர் வாவா சுரேஷ் பாம்பு ஒன்றை பிடிக்க முயற்சித்த போது திடீரென அந்த பாம்பு அவரது தொடையில் கொத்தியது 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக கூட செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது அவரது உடல் நிலை மிக வேகமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
இதனை அடுத்து அவருடைய நண்பர்கள் உறவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்