300 தடவை பாம்புகளிடம் கடிபட்ட வீரர்

புதன், 2 பிப்ரவரி 2022 (00:08 IST)
300 முறைக்கு மேல் பாம்பு கடித்துள்ள பாம்பு பிடி வீரர் தற்போது உடல்தேறி வருகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்.  இவர் அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழில்செய்து வருகிறார். தனது 32 வருட பாம்பு பிடி வாழ்க்கையில் 50ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்துள்ள அவர் 300 முறை பாம்புகளால் கடிபட்டுள்ளார்.

சமீபத்தில் கோட்டயத்திலுள்ள ஒரு வீட்டில் பதுங்கிய நல்ல பாம்பை பிடிக்கச் சென்ற  சுரேஷை பாம்பு கடித்தது.  தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்