காந்தி நினைவிடத்தில் மரக்கன்று நட்டார் டிரம்ப்..

Arun Prasath

செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (11:37 IST)
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் காந்திக்கு மரியாதை செலுத்தி மரக்கன்று நட்டார்.

நேற்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டதை அடுத்து, உலகின் மிக பிரம்மாண்டமான ஸ்டேடியமான அகமதாபாத்தின் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் டிரம்ப் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அதன் பிறகு தாஜ் மஹாலை காண ஆக்ரா சென்றனர்.

இன்று காலை டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அங்கே மரக்கன்று ஒன்றை நட்டார் டிரம்ப்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்