பெண் மருத்துவர் கொலையாளிகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்.. அதிர்ச்சி புகைப்படங்கள்..!

Mahendran
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (12:20 IST)
பெண் மருத்துவர் கொலையாளியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இருக்கும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ தற்போது இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசு மெத்தன போக்கில் இருந்து வருவதாக குற்றம் தாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் கொல்கத்தா துணை காவல் ஆய்வாளர் அனூப் குப்தா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக பழகு பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்