ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏ.சி. கம்ப்ரசர் வெடித்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் சச்சின் கபூர், அவரது மனைவி ரிங்கு கபூர் மற்றும் அவர்களது மகள் சுஜன் கபூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலை 1:30 மணியளவில், நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்டது.
சச்சின் கபூர், அவரது மனைவி மற்றும் மகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். அதே அறையில் உறங்கி கொண்டிருந்த அவர்களது மகன், ஜன்னல் வழியாக குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். அவர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.