ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வரும் நிலையில், 100 கிலோமீட்டர் தொலைவுக்கு இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட தேஜஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது.
இந்த போர் விமானங்கள் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி, துல்லியமாக தீவிரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பினால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.