முன்னதாக, தேர்வு இரு காலாண்டுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது போட்டியாளர்களிடையே சமத்துவம் ஏற்படுத்தாது என மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், இரண்டு வேறுபட்ட கேள்விப் படிவங்களில் தேர்வு நடத்துவது நியாயமற்றது. கேள்விகள் சீரான முறையில் அமையும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இது ஒரு பகுதியை பாதிக்கும்," எனக் கூறினர். இதனையடுத்து, ஒரே ஷிப்ட்டில் தேர்வு நடைபெறவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது. தேர்விற்கு இரண்டு வாரங்கள் இருந்தாலும், தேவையான சோதனை மையங்களை ஏற்படுத்தி ஒரே நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.