ஸ்பைஸ் ஜெட் விமானிகள் பணியிடை நீக்கம்

திங்கள், 25 அக்டோபர் 2021 (16:35 IST)
ஸ்பைட் ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தின்  பணிபுரியும் விமானிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை அன்று ஐதராபாத் மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெல்காமுக்கு வந்த ஸ்பைஸ்ஜெ  விமானத்தை 26 வது ஓடுபாதையில் தரையிறக்க வேண்டுமென கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது.

ஆனால் விமானிகள் 8 வது ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கினர்.  விமானிகள் ஏன் இவ்வாறு செய்தனர் என்பது குறித்த விமாசனை முடியும் வரை அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்