நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன்: மக்களவை சபாநாயகர் அறிவிப்பால் எம்பிக்கள் அதிர்ச்சி..!

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (10:13 IST)
நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திடீரென அறிவித்துள்ளது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மணிப்பூர் விவகாரத்தை மையப்படுத்தி எதிர்க்கட் எம்பிகள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கண்ணியமாக நடந்து கொள்ளும் வரை அவைக்கு வரமாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த தகவலை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் இடம் மக்களவை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 இருதரப்பு எம்பிக்கள் நடந்து கொண்ட விதத்தால் சபாநாயகர் ஓம்பிர்லா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்