வாரத்தின் முதல் நாளே பெரும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

திங்கள், 2 மே 2022 (09:35 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
 
இன்றைய பங்குச்சந்தை சற்றுமுன் தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் சுமார் 550 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து 56531 என்ற வ்புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 163 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 943 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்