கர்ப்பிணி பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது… எஸ்பிஐ யின் அதிர்ச்சி அறிவிப்பு!

சனி, 29 ஜனவரி 2022 (10:03 IST)
கர்ப்பிணி பெண்கள் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படமாட்டர்கள் என்றும் பதவி உயர்வு அளிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ் பி ஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பு பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. 3 மாதத்துக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எஸ் பி ஐ யில் புதிதாக பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்