27 ஆயிரத்தை விட குறைந்தது கொரோனா: பொதுமக்கள் நிம்மதி!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:39 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 27 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்தது 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,533என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 28,156என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,246 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 28,156 என்றும், இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,376 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்