பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ. தொலைவில், ரூ.100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் சாலையில் நடுவில் உள்ள மரத்தை கூட எடுக்காமல் சாலை போட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் ரூ.100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கத் திட்டத்தை மேற்கொண்டபோது, மரங்களை அகற்ற வனத்துறையிடம் அனுமதி கோரியது. ஆனால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, 14 ஹெக்டேர் வன நிலத்திற்கு இழப்பீடு கோரியது வனத்துறை. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அவர்கள் ஒரு விசித்திரமான நடவடிக்கையை மேற்கொண்டனர். மரங்களைச் சுற்றி சாலையை அமைத்தனர்.
சாலையின் நடுவில் மரங்கள் இருப்பதால் ஏற்கனவே பல விபத்துக்கள் நடந்துள்ளன என்று அவ்வழியே சென்ற ஒருவர் கூறினார். இருப்பினும், மாவட்ட நிர்வாகம் மரங்களை அகற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.