திருப்பூர், குப்பாண்டம்பாளையத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், குற்ற நுண்ணறிவுத் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பிகார் மாநிலத்தை சேர்ந்த 30 வயது ஜாகிர் அன்வர் மற்றும் 25 வயது ரவி ராஜா ஆகிய இருவர், அனுமதியின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களை கைது செய்தனர்.