அயோத்தி ராமர் கோவில் பொதுமக்களின் தரிசனத்துக்காக இன்று திறக்கப்படுகிறது. நேற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் தினமும் காலையில் 7 முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோயில்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில், 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.