தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர்..

Arun Prasath

வியாழன், 19 செப்டம்பர் 2019 (11:31 IST)
தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ராஜ்நாத் சிங்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறைவான எடையுள்ள ஜெட் ஃபைடர் ஆகும்.

இந்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் விமானத்தில் வீரர்கள் அணிந்து கொள்ளும் சீருடையை அணிந்து கொண்டு தேஜஸ் விமானத்தில் பறக்க தயாரானார். பின்னர் தேஜஸ் விமானத்தில் அவரும், விமான படை தளபதி என்.திவாரியும் பறந்து சென்றனர்.

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்