சித்துவுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி விலகல்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (20:39 IST)
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சித்து சற்று முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர் ரசியா சுல்தானா என்பவர் ராஜினாமா செய்தார்.
 
இந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொது செயலாளர் யோகிந்தர் திங்ரா என்பவரும் பதவி விலகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீர் திடீரென சித்து உள்பட மூவர் அடுத்தடுத்து பதவி விலகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் ராஜினாமா செய்தவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்