அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை அந்நாட்டின் அரசு நாடு கடத்தி வரும் நிலையில், நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் கூடிய விமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவது ஏன் என அம்மாநில முதல்வர் பகவத் மான் கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் ஏற்கெனவே ஒரு விமானத்தில் நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது விமானமும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, பஞ்சாப் மாநில முதல்வர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.