பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சில முக்கிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை குறைக்கும் தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டும், பொறுப்புடன் இணையத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்றும் அரசு தெரிவிக்கிறது.