60 நாட்களுக்கு முன்பு ரயில் பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்படும் நிலையில் அக்டோபர் 20 ஆம் தேதி வரவிருக்கும் தீபாவளியையொட்டி, அக்டோபர் 17 ஆம் தேதிக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பயண சீட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான முன்பதிவு 5 நிமிடங்களிலேயே முடிந்தது.