மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம்: ஆந்திர முதல்வரின் அதிரடி திட்டம்!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (08:45 IST)
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 
 
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்
 
இதற்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளின் வலியுறுத்தியதாகவும் விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
தற்போது விஜயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி, ராஜ மகேந்திரன் மற்றும் கடப்பா ஆகிய 6 மாவட்டங்களில் விமான நிலையங்கள் உள்ளன என்பதும் மற்ற மாவட்டங்களில் விமான நிலையத்தை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்