மதுபோதையில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய ஆசாமி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

திங்கள், 17 ஜனவரி 2022 (10:32 IST)
ஆந்திராவில் மதுபோதையில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு கிராம தேவதைக்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கிராம தேவைதைக்காக ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவது வழக்கம்.

அவ்வாறாக ஆடு வெட்டும் நிகழ்ச்சியில் சுரேஷ் என்ற இளைஞர் ஆட்டை பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை சலபதி என்ற நபர் வெட்டியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் வெட்டப்பட்ட நிலையில் மதுபோதையில் இருந்த சலபதி ஆடு என நினைத்து சுரேஷின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சலபதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்