ஒடிசாவின் கட்டாக் நகரின் பல பகுதிகளில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்ததை தொடர்ந்து, முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான அரசு சமூக ஊடகங்கள் மற்றும் இணைய சேவைகளுக்குத் தற்காலிக தடை விதித்துள்ளது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகச் சேவைகளும், மொபைல் டேட்டா மற்றும் பிராட்பேண்ட் உட்பட அனைத்து வகையான இணைய சேவைகளும் இந்திய தந்திச் சட்டம், 1885-இன் கீழ் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.