மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவுப்பு 90 சதவீதம் பேர் ஆதரவு

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (21:59 IST)
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு சார்பாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு மக்களிடம் இணையதளத்தில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக டுவிட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.


 

 
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு சார்பாக பிரதமர் மோடி திடீரென்று அறிவிப்பை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.
 
பொதுமக்களின் இயல்வு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாத மத்திய அரசால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மோடி இந்த அறிவுக்கு நாட்டு மக்களிடம் இணையதளத்தில் கருத்து கேட்கப்பட்டது.
 
இதற்கு 90 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து தவிக்கும் பொதுமக்கள் இவ்வாறு ஆதரவு தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது.
அடுத்த கட்டுரையில்