மோடியின் தாடிதான் வளர்கிறது - மம்தா பானர்ஜி விமர்சனம்

வெள்ளி, 26 மார்ச் 2021 (17:43 IST)
தமிழகத்தைப் போன்று மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் மம்தான் பானர்ஜி ஈடுபட்டபோது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ்க் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பிரசாரத்தி ஈடுபட்ட முதல்வர் மம்தா கூறியதாவது:  நாட்டின் வளர்ச்சி நின்றுவிட்டது. அதற்குப் பதிலாக பிரதமர் மோடியில் தாடி மட்டுமே வளர்கிறது. அவர் தன்னைத்தானே விவேகானந்தர் எனக் கூறிக் கொள்கிறார். சில சமயங்களில் அரங்களுக்கு தன் பெயரிடுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்