இந்தியர்கள் எங்கள் நாட்டிற்கு வேலைக்கு வாங்க.. 5 லட்சம் விசா வழங்குவதாக ஜப்பான் அறிவிப்பு..!

Siva

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (09:08 IST)
இந்திய இளைஞர்களுக்கு அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் 5 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் வழங்கப்படும் என்று ஜப்பானின் துணை தூதர் தகாஹாஷி முனியோ சென்னையில் அறிவித்தார். இந்தோ - ஜப்பான் தொழில் வர்த்தக சபை நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.
 
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் இஷிபாஷி ஷிகெரு ஆகியோர் நடத்திய உச்சி மாநாட்டின் தீர்மானங்களை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
பொருளாதாரம், உயர் தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாசார பரிமாற்றம் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன. தூய எரிசக்தி, ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகளுக்கு ஆதரவு வழங்கவும் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
 
மனிதவள பரிமாற்றத்தை மேம்படுத்தும் விதமாக, அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு விசா வழங்கப்படும். மேலும், இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் திறமையான பணியாளர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் ஜப்பானிய தொழில்துறைகளில் பணியாற்றவும், மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களை பெறவும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன என்று தகாஹாஷி முனியோ தெரிவித்தார்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்