இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

Siva

புதன், 13 ஆகஸ்ட் 2025 (12:28 IST)
இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU), பகவத் கீதையின் தத்துவங்கள் மற்றும் போதனைகளை மையமாக கொண்டு, புதிய முதுகலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படிப்பு, சமகால சவால்களை எதிர்கொள்ள பகவத் கீதை எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதை ஆய்வு செய்யும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
பகவத் கீதையின் தத்துவங்களை, இன்றைய சமூகச் சூழலுக்கு பொருத்தி பார்க்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "பகவத் கீதை தீவிரவாதம், போர், சுற்றுச்சூழல், மனித மதிப்புகள், சமூகவியல் மற்றும் இந்திய சிந்தனை மரபின் அறிவியல் அணுகுமுறை குறித்த ஆழமான தகவல்களை வழங்குகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தப் படிப்பின் மூலம், மாணவர்கள் பகவத் கீதையின் தத்துவங்களை புரிந்துகொள்வதுடன், நவீன உலகின் சிக்கல்களுக்கு அதன் மூலம் தீர்வு காணும் திறனை பெறுவார்கள் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த படிப்பு, இந்தியத் தத்துவ மரபு மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து விரிவான அறிவை வழங்கும். ஆனால் இந்த படிப்புக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்