மும்பையில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் கதி என்ன?

புதன், 8 மார்ச் 2023 (12:53 IST)
மும்பையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணம் செய்த மூன்று பேர் நிலை குறித்த தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது. 
 
இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக கடலில் இறங்கியதாகவும் அந்த ஹெலிகாப்டர் இருந்த மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த சம்பவம் தொடர்பாக மாநில மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த சம்பவம் எப்படி நடந்தது? எதனால் நடந்தது? என்று ஆராய உயர்மட்ட குழு  குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மும்பை கடற்கரையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்