டாக்காவில் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர வெடிவிபத்து.- 14 பேர் பலி

செவ்வாய், 7 மார்ச் 2023 (23:04 IST)
வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் 7 மாடி கட்டிடத்தில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 14 பேர் பலியாகினர்.

வங்காளதேச நாட்டில்  பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது, இந்த நாட்டின்  தலைநகர் டாக்காவில்  இன்று பலத்த சத்தத்துடன் ஒரு 7 மாடி கட்டிடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், கட்டிடத்தில் இருந்த பலரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், பலர் அங்கிருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்  மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், 14 பேர் பலியானதாகவும், இதில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்