பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துவாக இருந்தவர்களேள்: குலாம் நபி ஆசாத் கருத்து

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:21 IST)
பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துக்கள் ஆக இருந்தவர்கள் தான் என்றும் இந்து மதம் பழமையானது என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சி என்ற கட்சியை சமீபத்தில் ஆரம்பித்தவர் குலாம் நபி ஆசாத். இவர்   ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இவர் சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய போது சில முஸ்லிம்கள் வெளியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் ஆனால் இங்கே இருந்த இந்துக்கள் தான் முஸ்லிம்களாக மாறி உள்ளனர் என்று கூறியுள்ளார்.  
 
இஸ்லாம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது, ஆனால் இந்து மதம் என்பது மிகவும் பழமையானது. இந்து மதத்தில் இருந்து மாறியவர்கள் பெரும்பாலான முஸ்லிம்கள்
 
 இந்து மதத்தில் இருந்து மாறியவர்கள் தான்.  என்று அவர் தெரிவித்தார்.  காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத் இந்து மதம் குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்