தாத்தாவின் காம வெறியால் சீரழிக்கப்பட்ட 18 வயது பேத்தி!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (10:34 IST)
மும்பையில் 18 வயது பெண் ஒருவரை அவரது சொந்த தாத்தாவே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.


 
 
மும்பையில் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 18 வயது பெண் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். ரேவதியின் தாத்தாவுக்கு ரேவதி மீது காம உணர்வு இருந்து வந்துள்ளது. இதனால் ஒரு நாள் பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் ரேவதியின் தாத்தா அவரை பேத்தி என்றும் பார்க்காமல் வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
மேலும் தொடர்ந்து அந்த பெண்ணை தாத்தா வீட்டிற்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து தாத்தாவின் பிடியில் இருந்து தப்பித்த பேத்தி தனது பெற்றோரை சந்திக்க சென்றுள்ளார். ரயிலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ரேவதி இருந்ததால் அவரை போலிசார் விசாரித்தனர்.
 
போலீசாரின் விசாரணையில் தனது தாத்தா தன்னை பலவந்தமாக பலாத்காரம் செய்ததை அந்த பெண் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து பெற்றோரிடம் சேர்த்த போலீசார், அந்த தாத்தாவையும் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்