இந்த எட்டு வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 முதல் செல்லாது: எந்தெந்த வங்கிகள்?

சனி, 27 மார்ச் 2021 (06:48 IST)
ஏப்ரல் 1 முதல் 8 வங்கிகளின் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கி, யுனைடெட் பேங்க், சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய எட்டு வங்கிகள் ஏற்கனவே ஒரு சில வங்கிகளுடன் இணைக்கப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மேற்கண்ட எட்டு வங்கிகளில் பழைய காசோலைகள் மார்ச் 31ம் தேதி வரை தான் செல்லும் என்றும் ஏப்ரல் 1 முதல் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட வங்கிகள் எந்த வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கி காசோலையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்