பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

Siva

திங்கள், 23 ஜூன் 2025 (08:57 IST)
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிகளில் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது தற்கொலை போல் தோன்றினாலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி மன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
 
தேசிய நெடுஞ்சாலை அருகே, தேப்லா பானூரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கிராம சாலையில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரில் இறந்தவர்கள் மொஹாலியை சேர்ந்த 45 வயதான சந்தீப் சிங் ராஜ்பால் என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர், அவரது மனைவி 42 வயதான மந்தீப் கவுர், மற்றும் அவர்களது 15 வயது மகன் அபய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
சடலங்களில் துப்பாக்கி காயங்கள் உள்ளன, காருக்குள் பிளாஸ்டிக் பரப்புகளில் ரத்தம் தெறித்துள்ளது. தொழிலதிபரின் உடல் ஓட்டுநர் இருக்கையிலும், அவரது மனைவி முன் இருக்கையிலும், அவர்களது மகன் பின் இருக்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
 
அதிகாலையில் அந்த வழியாக சென்ற விவசாயிகள் வாகனத்தை கண்டு சந்தேகமடைந்து காவல்துறையை அழைத்துள்ளனர். ராஜ்புரா மன்ஜித் சிங், அர்ஷ்தீப் ஷர்மா, ஹர்தேவ் சிங், ஜஸ்விந்தர் பால் ஆகிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
 
எஸ்யூவி காரில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குடும்பத்தினரின் உறவினர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் மொஹாலியில் இருந்து வருவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
சந்தீப் சிங் தனது மனைவியையும் மகனையும் சுட்டுக் கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்