ஜூன் 1 முதல் 6 வரை, அவர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வார் என்றும், அதில் ஒன்றுதான் அயோத்தி ராமர் கோயில் என்றும் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோவிலில் கலந்து கொண்ட பிறகு, அவர் பல்வேறு வணிகரீதியான கூட்டங்களிலும் கலந்து கொள்வார் என்றும், இன்று ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும், அதன் பிறகு சில மூத்த அதிகாரிகளை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியம் குறித்து தெரிந்து கொள்வதற்காகவே அவர் இந்தியா வந்துள்ளார் என்றும், குறிப்பாக அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதில் அவருக்கு மிகுந்த விருப்பம் என்றும் அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் நடைபெறும் வணிக வட்டமேசை மாநாடு உட்பட பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வார் என்றும், ஜூன் 6-ம் தேதி அவர் தென்னாப்பிரிக்கா புறப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.