முன்னதாக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்துறை அமைச்சகம் ஜூலை 22 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியானது உறுதி செய்யப்பட்டது.
சட்டத்தின்படி, காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் துணைத் தலைவர், பதவியேற்ற நாளிலிருந்து முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பார்.