5 வயது மகளை ஸ்கூட்டர் ஓட்டவைத்த தந்தை - அரசின் அதிரடி தண்டனை

புதன், 1 ஆகஸ்ட் 2018 (10:31 IST)
கேரளாவில் 5 வயது மகளை தந்தை ஒருவர் ஸ்கூட்டர் ஓட்ட வைத்ததால், அவரின் டிரைவிங் லைசென்சை வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
கேரளா மாநிலம் எடப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் நபர் ஒருவர், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். சற்று நேரத்தில் முன்னாள் அமர்ந்திருந்த அந்த நபரின் 5 வயது மகள் ஸ்கூட்டரை ஓட்ட ஆரம்பித்தார்.
 
இதனை அந்த வழியாக சென்ற நபர் படம்பிடித்து  சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இது அந்த நபருக்கு மட்டுமின்றி சாலையில் செல்வோருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என பலர் அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து வீடியோவை வைத்து அந்த நபரை பிடித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அவரின் டிரைவிங் லைசென்சை அதிரடியாக ரத்து செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்