பிரசவ வார்டில் இருந்து குழந்தையை தூக்கி சென்ற நாய்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (16:58 IST)
மத்தியபிரசேத மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் இருந்து நாய் ஒன்று குழந்தையை அதன் வாயில் கவ்வியபடி தூக்கி சென்றது.


 

 
உத்திரபிரசேத மாநிலம் சித்ராகூட் பகுதியை சேர்ந்த ஷய்ரா பனோ என்பவர் மத்திய பிரசேதம் மாநிலம் சட்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அன்று இரவு அவருக்கு குறைபிரசவத்தில் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் நாய் ஒன்று பிரசவ அறைக்குள் புகுந்து குழந்தையை தூக்கி சென்றுள்ளது.
 
அதை பார்த்த மக்கள் நாயை விரட்டி குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுபோன்று மத்திய பிரதேசத்தில் நடக்கும் 3வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்