20 ஆயிரம் கோடிக்கு ஹெராயின் கடத்தலா? சென்னை தம்பதி கைது!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:35 IST)
20 ஆயிரம் கோடி ஹெராயின் என்ற போதைப் பொருள் கடத்தியதாக சென்னையை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஆப்கானில் இருந்து குஜராத் வந்த கப்பல் ஒன்றில் இரண்டு கண்டெய்னர்கள் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததை அடுத்து அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் இருபதாயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
குஜராத் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கண்டெய்னர் சென்னை சேர்ந்த தம்பதிகள் நடத்திவரும் நிறுவனத்திற்கு வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனை அடுத்து அந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டு குஜராத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட இருபதாயிரம் கோடி ஹெராயினை கடத்தியது யார்? யாருக்கு கடத்தப்பட்டது? என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்