ஜேமி மீக் ஏர் இந்தியா AI171 விமானத்தில் இருந்தார். இது அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமாகும். விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும் 1 கனடியர் உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, “இந்த விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையானது,” என தெரிவித்து, “இந்த துயர தருணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு என் ஆழ்ந்த அனுதாபம்,” என்றார். மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளில் நேரில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.