பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ், பாஜக உள்பட அரசியல் கட்சிகள் பீகாரில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அவ்வப்போது பீகார் மாநிலத்திற்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பேரரசர் அசோகரின் வாரிசுகளை சந்தித்ததாகவும், அவர்கள் பாஜகவுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜெகதேவ் பிரசாந்த் மற்றும் அவரது வம்சாவளியினர் பேரரசர் அசோகரின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படுகிறது. "கடந்த தேர்தலில் கூட பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த தேர்தலிலும் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தன்னிடம் கூறியதாக, துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி கூறியுள்ளார்.