மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து, மார்ச் 31 திங்கள் ரம்ஜான் பண்டிகை காரணமாக வங்கிகள் செயல்படாது. ஏப்ரல் 1 செவ்வாய் ஆண்டுக்கணக்கு சரிசெய்வதற்காக பொதுமக்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்காது.
எனவே மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை மூன்று நாள்களும் வங்கிகள் இயங்காது என்பதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். எனவே, முக்கிய வங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.