சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா சிறப்பாக நடத்தப்படும். இந்த வருடத்திற்கான விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றி விழாவை தொடங்குகிறார் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஷு பண்டிகை ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படும். இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.