டெல்லிக்கு ராணுவத்தை அனுப்புங்கள்.. கெஜ்ரிவால் கோரிக்கை

Arun Prasath

புதன், 26 பிப்ரவரி 2020 (11:54 IST)
டெல்லியில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுபடுத்த காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமித் ஷாவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றனர். இதில் பேசிய கெஜ்ரிவால், டெல்லி கலவரத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால் ராணுவத்தை களம் இறக்க வேண்டும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்தார். மேலும் டெல்லி பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்